• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று மாட்டிற்கு தடை போட்டவர்கள் நாளை மீனிற்கும் போடுவார்கள் – கேரள முதல்வர்

May 27, 2017 தண்டோரா குழு

இன்று மாட்டிற்கு தடை போட்டவர்கள் நாளை மீனிற்கும் தடைபோடுவார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக மாடுகளை சந்தைகளில் விற்கப்படுவதை தடுக்க மத்திய அரசு மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவை நாம் தற்போது அனுமதித்தால் நாளை மீன் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கும் மத்திய அரசின் இந்த முடிவு நாகரீகமற்ற செயல் மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க