• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுக்காக இசையமைத்த பாடலில் ஜி.வி.பிரகாஷ்!

May 27, 2017 tamilsamayam.com

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சிம்புவுக்காக இசையமைத்த ஒரு பாடலை தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் முதல் நடிப்பதாக பேசப்பட்டவர் நடிகர் சிம்புதான். மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஜி.வி. பிரகாஷ்.

சில பிரச்னைகளுக்கு இடையில் சிம்பு இடத்தை தனுஷ் நிரப்பிக் கொண்டார். ஜி.வி. பிரகாஷ் இடத்தில் சந்தோஷ் நாராயணன் ஆக்கிரமித்துவிட்டார்.

ஜி.வி. பிரகாஷ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட உடனேயே, சிம்புவுக்காக ‘உருட்டு கண்ணால’ என்ற பாடலை உருவாக்கிவிட்டார். பாடலை ஏகாதசி எழுதியுள்ளார். இந்தப் பாடலை, சந்தோஷ் ஹரிஹரன், மோனிஷா, மாளவிகா ஆகியோர் பாடியுள்ளனர்.

ஆனால், தற்போது தனுஷ் நடிப்பதால், தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் ஆகாது என்பதால், அந்தப் பாடலை தான் நடிக்கும் ‘செம’ படத்தில் பயன்படுத்தி கொண்டார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.

மேலும் படிக்க