• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தும் மறுத்தாரா ராஜ்கிரண்?

May 17, 2017 தண்டோரா குழு

உலக நாயகன் கமல் ஹாஸன் முதல் முறையாக பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்தும் அவர் வர மறுத்துவிட்டார் என்ற செய்தி பரவி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராஜ்கிரணுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பும், மரியாதை உண்டு. நடிகர் ராஜ்கிரண் பணம் கிடைக்கும் என்பதற்காகவிளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அதற்கு தகுந்த காரணத்தை அந்த நிறுவனத்திடமே மிக தைரியமாக கூறியதும், இலங்கை தமிழர் பிரச்சனை என்பது ஒரு உலக அளவிலான பிரச்சனை என்று பேசியதும், ‘தல’ அஜீத் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களின் பெருந்தன்மை பற்றி பேசியது ஆகியவை ராஜ்கிரனை பற்றி சமீபத்தில் சமூகவலைத்தலங்களில் வைரலான விஷயங்கள்.

இந்நிலையில் அவரே எதிரிப்பார்த்திடாத ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடிகர் ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆனால் எனக்கு கோடிகள் பெரிதல்ல, கொள்கைதான் முக்கியம் என்று கூறி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டாராவும் கூறப்படுகிறது.

மேலும்,உலக நாயகன் கமல் ஹாசனே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடியாது என்று தைரியமாக நடிகர் ராஜ்கிரண் கூறி விட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இதுக்குறித்து ராஜ்கிரண் கூறும்போது,

இந்த செய்தி உண்மையில்லை கமல்ஹாசனோ நிகழ்ச்சி நடத்தும் நிறுவனமோ, யாரும் இது விசயமாக என்னிடம்பேசவில்லை. பேசினாலும்நான் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பது மட்டும் உண்மை என்றார்.

மேலும் படிக்க