• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கு பேய் பயம் போய்விட்டது – ஸ்ரீதிவ்யா

May 17, 2017 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் ஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. காமெடியுடன் கூடிய திகில் படமான இதில், ஹோம்லி கேரக்டரில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.

பேய் படம் என்றால் எல்லோருக்கும் ஒருவித பயம் இருக்க செய்யும்.அதுபோல தான் பொதுவாகவே பேய்ப் படங்கள் பார்ப்பதென்றால் ஸ்ரீதிவ்யாவுக்கு அவ்வளவு பயமாம். அதனால், பேய்ப் படங்கள் பார்ப்பதையே தவிர்த்து விடுவாராம்.

ஆனால், இந்தப் படத்தில் நடித்தபிறகு பேய் மீதான பயம் போய்விட்டதாம். காரணம்?“எனக்கு முன்னாடி தான் பேயாக நடிப்பவருக்கு மேக்கப் போட்டார்கள். இந்தப் படத்தின் மூலம் பேய்ப் படங்கள் எப்படி எடுக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். அதனால், எனக்கு பயம் போய்விட்டது” என்றார்.

மேலும் படிக்க