• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கன் வாங்க பாதி வழியில் ஹெலிக்காப்டரை தரையிறக்கிய பைலட் !!!

May 16, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் மெக்டொனல்ட் உணவகத்திற்கு முன் சிக்கன் வாங்க அனுமதியின்றி ஹெலிக்காப்டரை தரை இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த பைலட் ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்துக்கொண்டிருக்கும் போது பசி ஏற்பட்டதால், உணவு பார்சல் பெற்றுக்கொள்ள சிட்னியின் ரௌஸ் ஹில் என்னும் இடத்திலுள்ள மெக்டொனல்ட் உணவகத்தின் முன் ஹெலிக்கொப்டரை தரை இறக்கியுள்ளார்.

ரௌஸ் ஹில் பகுதியில் வசிக்கும் குடியிருப்பவர்கள் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதியின்றி தரையிறங்கியதையும், பைலட் எந்த பரபரப்புமின்றி உணவகத்தை நோக்கி சென்று உணவு பார்சல் வாங்கிகொண்டு சாதாரணமாக புறப்பட்டு சென்றதையும் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூறுகையில், “அந்த இடத்தின் உரிமையாளரிடம் முன் அனுமதி பெற்றுக்கொண்டு, ஹெலிகாப்டர் தரை இறங்கியிருந்தால், அது எங்கள் ஆணைய சட்டத்திற்கு எதிரானது அல்ல” என்று தெரிவித்தது.

“ஹெலிகாப்டரை தரையிறங்க முன் அனுமதி பெற்ற பிறகு தான், தரை இறக்கினேன்” என்று அந்த ஹெலிகாப்டர் பைலட் கூறினார்.

மேலும் படிக்க