கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மேக்ஸ்வெல் ஓரளவு கைகொடுக்க, பஞ்சாப் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மொஹாலியில் நடக்கும் 49வது லீக் போட்டியில், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பிர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் சுவப்னில், ராகுல் திவாதியா, மனன் வோஹ்ரா, மாட் ஹென்ரி இடம் பெற்றனர். கொல்கத்தா அணியில், உத்தப்பா மீண்டும் அணிக்கு திரும்பினார். சாவ்லாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
கவுத்திய கப்டில்:
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் கப்டில் (12) வேஹ்ரா (25) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த மார்ஸ் (11) ஏமாற்றினார்.
அசத்தல் ஜோடி:
பின் இணைந்த மேக்ஸ்வெல், சகா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொல்கத்தா பவுலர்களை பதம் பார்த்த மேக்ஸ்வெல் 44 ரன்கள் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் அவுட்டானார். இவருக்கு கம்பெனி கொடுத்த சகாவும் (38) நடையைகட்ட, பஞ்சாப் அணியின் ரன்வேகம் படுத்தது.
கடைசி வரிசை வீரர்கள் தட்டுத்தடுமாற பஞ்சாப் அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு