• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசைப்புயலை பற்றி பாகுபலி இசை அமைப்பாளரின் நெகிழ்ச்சியான பதில்

May 8, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஏப் 28ம் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், படத்தின் இசை மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது என்பதில் சந்தேகமுமில்லை.

இந்நிலையில் இசையமைப்பாளரான எம்.எம்.கீரவானியிடம், இந்த படத்தின் பாடல்களில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை அவர் பயன்படுத்தாதது ஏன்❓என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அவர்,

இதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்றும்,அவர்தான் சின்ன சின்ன பாடகர்களை பெரிய ஆளாக்கியவர் என்றும், அவருடைய வழியை தானும் பின்பற்றியதாகவும் கூறினார்.
கடந்த 90ஆம் ஆண்டுகளில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் ஏராளமான புதிய பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தி வருகிறார். இதில் பலர் தற்போது முன்னணி பாடகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க