• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவறான புகைப்படத்தால் கடுப்பான துல்கர் சல்மான்

May 8, 2017 தண்டோரா குழு

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக வளம் வரும் இவர் தமிழில் வாய் மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார். .

கடந்த 2015ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த ஓகே காதல் கண்மணி படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி சிறுது நேரத்தில் தீயாய் பரவி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இதற்கிடையில், துல்கர் சல்மானின் குழந்தை இது தான் என்று கூறி சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்கள் பரவின. இதனால் கடுப்பான துல்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவு செய்து தவறான புகைப்படத்தை வெளியிட வேண்டாம். என்னால் முடியும்போது உங்களுக்கு பகிர்கிறேன் என்று கடுப்பாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க