• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே அணி வெற்றி

May 3, 2017 தண்டோரா குழு

தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி.

கேரளா மாநிலம் கொல்லத்தில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்ற தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றுள்ளது.

இந்த அணி வெற்றி பெற்றதை அடுத்து வென்ற கோப்பையை, ரயில்வே பாதுகாப்புப் படை அணியினர் சேலம் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவை சந்தித்து நேற்று (மே-2)காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின் போது அவர்களுடன் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் சிவதாஸ் மற்றும் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க