• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் !

April 15, 2017 தண்டோரா குழு

காற்று வெளியிடை வெளியான கையோடு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் மணிரத்னம்.

‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு ‘தளபதி’ இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறார், ராம் சரணை வைத்து தமிழ் – தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார் மணிரத்னம் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.ஆனால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து நேரடியாக ஒரு ஹிந்திப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்தனம். இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே மணிரத்னம் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யா ராய் கூட்டணி குரு, ராவணன் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவர் பாலிவுட்டுக்குத் திரும்புகிறார்.சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படம், எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. இதுமாதிரியான படங்களை பாலிவுட்டில் தான் கொண்டாடுவார்கள் என நினைத்து அங்கு செல்கிறாராம்.

மேலும் படிக்க