• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுக்காக விபரீத முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின்

April 3, 2017 தண்டோரா குழு

இயக்குனர் பிரபு சாலமன் தொடரி படத்தை தொடர்ந்து கும்கி படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தனது அடுத்த படம் குறித்து அவர் சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

பாலைவன பகுதிகளில் நடக்கும் கதையை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை எடுக்கவுள்ளதாகவும் அதற்காக உதயநிதி ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. மேலும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் உதயநிதி விரைவில் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் முழுக்க முழுக்க வெயில் வறுத்தெடுக்கும் பாலைவனத்தில்தான் நடக்கப் போகிறதாம்.விருது வாங்கும் அளவுக்கு கதை வலிமையாக இருக்கிறதாம். அதனால்,விருதுக்காகஉதயநிதிதுணிந்து இந்த விபரீத முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க