• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரிஷாவுடன் வெளியான சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து ராணா விளக்கம்

April 1, 2017 தண்டோரா குழு

கடந்த நாட்களுக்கு முன் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதில், நடிகர் ராணா, திரிஷாவுக்கு முத்தம் கொடு்ப்பது போன்ற புகைப்படமும் வெளியானது. ஆனால், சுசித்ரா யாரோ எனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி செய்கிறார்கள் என்று கூறினார்.எனினும், இந்த புகைப்படம் குறித்து ராணாவும், திரிஷாவும் கருத்தும் கூறாமல் இருந்தனர்.

இதற்கிடையில், பாகுபலி படம் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ராணாவிடம் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராணா, நான் அப்படி எதுவும் செய்யவில்லை,மீடியா தான் இது போன்ற விஷயங்களை பெரிதாக்கி ஆதாயம் தேடுகிறது. இது போன்ற பல போட்டோக்கள் இருக்கும் போது, என்னை இலக்கு வைத்து கேட்பது ஏன்? நான் பிரபலமாக இருப்பது தான் என்று பதில் அளித்தார்.

மேலும் படிக்க