• Download mobile app
19 Feb 2026, ThursdayEdition - 3662
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரிஷாவுடன் வெளியான சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து ராணா விளக்கம்

April 1, 2017 தண்டோரா குழு

கடந்த நாட்களுக்கு முன் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதில், நடிகர் ராணா, திரிஷாவுக்கு முத்தம் கொடு்ப்பது போன்ற புகைப்படமும் வெளியானது. ஆனால், சுசித்ரா யாரோ எனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி செய்கிறார்கள் என்று கூறினார்.எனினும், இந்த புகைப்படம் குறித்து ராணாவும், திரிஷாவும் கருத்தும் கூறாமல் இருந்தனர்.

இதற்கிடையில், பாகுபலி படம் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ராணாவிடம் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராணா, நான் அப்படி எதுவும் செய்யவில்லை,மீடியா தான் இது போன்ற விஷயங்களை பெரிதாக்கி ஆதாயம் தேடுகிறது. இது போன்ற பல போட்டோக்கள் இருக்கும் போது, என்னை இலக்கு வைத்து கேட்பது ஏன்? நான் பிரபலமாக இருப்பது தான் என்று பதில் அளித்தார்.

மேலும் படிக்க