• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருநங்கை பிரித்திகா யாசினி தர்மபுரியில் பணியமர்த்தப்பட உள்ளார்

April 1, 2017 தண்டோரா குழு

சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராக தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளராக சேலத்தை சேர்ந்த பிரித்தியா யாசினி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

சுமார் ஒரு ஆண்டு காலமாக அவர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று( மார்ச் 31) பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

நிறைவு விழாவில் அவர் பேசுகையில் “ காவலர்கள் பொதுமக்களுடன் அக்கறையாக நடந்து கொள்ள வேண்டும்” என பயிற்சி பெற்ற காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருநங்கையான பிரித்திகா யாசினி தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க