• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதரசக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் – கனிமொழி

March 25, 2017 தண்டோரா குழு

கொடைக்கானல் பகுதியில் இருக்கும் பாதரசக் கழிவுகளை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும் என்று மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசியதாவது;

மெர்குரி எனப்படும் பாதரசத்தில் இருந்து தெர்மாமீட்டர் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தொழிற்சாலை கொடைக்கானலில் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் 2001-ம் ஆண்டு மூடப்பட்டது.

அதன் பின் பாதரசக் கழிவுகளை அந்நிறுவனம் முறையாக அகற்றாமல் சுமார் 1.3 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானல் மலைக்காடுகளில் கொட்டப்பட்டன.

பாதரசம் கொடிய விஷத்தன்மை வாய்ந்தது. இந்தத் தொழிற்சாலை அமைந்த பகுதிகளில் நீண்டகாலமாகவே மக்கள் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கழிவுகள் கொட்டப்பட்ட மலைக்காடுகளில் மழை பெய்யும்போது அந்த கழிவுகள் மழை நீரோடு கலந்து ஓடிவந்து வைகை ஆற்றில் கலக்கின்றன. இதனால் வைகை ஆற்றின் நீரைப் பயன்படுத்துபவர்களும் கடுமையான மாசுபாட்டுக்கும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ளனர்.

கொடைக்கானல் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதரசக் கழிவுகளை ஆராய்ந்ததில் ஒரு கிலோ மண்ணில் 20 மில்லி கிராம் பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த அபாயத்தை மத்திய அரசு அனுமதிக்கிறதா? இது பாதுகாப்பானதா?
பாதரசக் கழிவுகளை அகற்றுவதில் மத்திய அரசு முறையான எந்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை வரையறுத்துள்ளது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் இருக்கும் பாதரசக் கழிவுகளை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும். மேலும் கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

மேலும் படிக்க