• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கசகசா கலந்த கேக்குகளை உண்டால் சிறை தண்டனை உறுதி.

April 19, 2016 தண்டோரா குழு

கசகசா என்னும் உணவுப் பொருளை கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகளை உண்டால் அவர்களுக்குச் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. பயப்பட வேண்டாம் இந்தியாவில் இல்லை மலேசியாவில்.

கசகசா என்னும் உணவு பொருளை கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகளை சாப்பிட்டு சோதனையின் போது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று போதை மருந்து தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் வான் அப்துல்லா இஷாக் எச்சரித்து உள்ளார்.

மேலும், இந்த உணவை உண்டது உண்மை என்று சிறுநீர் சோதனை மூலம் நிருபமானால் அபாயகரமான போதைப் சட்டம் 1952ன் கீழ் இரண்டு வருடச் சிறை தண்டனை அல்லது 1,285அமெரிக்க டாலர் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், கசகசா விதைகள் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதை மலேசியாவில் உபயோகிப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கசகசா உபயோகிப்பது சட்ட விரோதம் என்பதால்
விற்பனையை அதிகரிக்க கேக்குகளில் அவை சேர்க்கப்படுவதாய் காவல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் 5 கிலோவிற்குக் குறைவாக கசகசாவை வைத்திருக்கும் நபர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் இஷாக் தெரிவித்தார்.

சந்தேகத்தின் பெயரில் விமான பயணிகளிடம் உள்ள கேக்குகளை சோதனை செய்யும் போது, அவற்றில் போதை பொருளான மோர்பின் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது எலுமிச்சை கசகசா கேக் வெளிப்படையாக விற்கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்ணும் நபர்கள் போதை நிலையில் காணப்படுவதால், இந்த மாதிரியான உணவு பொருள்களில் உள்ள மருந்துகள் என்ன என்று கண்டுபிடிக்க மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இஷாக் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க