• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியிடம் ‘பல்பு’ வாங்கிய ரவி சாஸ்திரி!

March 17, 2017 tamilsamayam.com

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்வதாக கருதி கடைசியில் பல்பு வாங்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில் முக்கியமான உத்தர பிரதேச மாநிலத்தில் 300க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பிரதமர் மோடியின் பா.ஜ., கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதே போல உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் பா.ஜ., ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, தனது கிரிக்கெட் கமெண்டிரி ஸ்டைலில், டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். கடைசியில் அது அவருக்கே ஆப்பு வைத்து விட்டது.

ரவிசாஸ்திரி வெளியிட்ட கருத்தில்,’ உத்தர பிரதேசத்தின் பா.ஜ.,வின் சரித்திர வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மோடி, அமித் ஷா ஜோடி, 300 என்ற மைல்கல்லை டிரேசர் புல்லட் வேகத்தில் கடந்தது. ‘ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி,’ நன்றி, உத்தரபிரதேச வெற்றி உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. என நாசுக்காக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க