• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டத் துறைக்குத் தனி தொலைக்காட்சி: மத்திய அரசு அறிவிப்பு

March 16, 2017 தண்டோரா குழு

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் சார்பில் புதிதாக தொலைக்காட்சி அலைவரிசை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தத் தொலைக்காட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள், முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் சொல்லி மணவிலக்குப் பெறும் சட்ட நடைமுறை, பொது சிவில் சட்டம் ஆகிய பல்வேறு சட்டம் தொடர்பான விஷயங்கள் குறித்த நிகழ்வுகள் இடம்பெறும்.

பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த முக்கிமான தீர்ப்புகள் குறித்த விவாதங்களும் இந்த அலைவரிசையில் இடம்பெறும். மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் இந்த தொலைக்காட்சி அலைவரிசையை முறைப்படி தொடங்கி வைக்கிறது.

“ஸ்வயம் பிரபா” என்ற இந்த சட்டத் துறை தொலைக்காட்சி அலைவரிசை டிடிஎச் முறையில் நேரடியாக வீடுகளில் ஒளிபரப்ப வகை செய்யப்படும்.

“இந்த அலைவரிசை நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், குறிப்பாக சட்டமாணவர்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படும்” என்று சட்ட அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.

சமூகத்தில் விளம்புநிலையில் உள்ளவர்களுக்காக சட்டம் தொடர்பான கல்வி குறித்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவதற்கு உதவும் வகையில், இதற்கான குழுவில் (போர்டு) பிரபல ஹிந்திப் பட இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோரை ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க