• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு

March 16, 2017 தண்டோரா குழு

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்டது.

தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்.

பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்திய போது திடீரென மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக கோஷமும் எழுப்பினர்கள்.

அதன் பின் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை நோக்கி காலணியை எறிந்தார். அது மீது விழுமால் தொலைக்காட்சிகளின் மைக்குகள் மீது விழுந்தது.காலணி வீசியவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க