• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோலி, அஷ்வினுக்கு பிசிசிஐ., கவுரவம்!

March 9, 2017 tamilsamayam.com

இந்திய கேப்டன் கோலிக்கு இந்த ஆண்டுக்கான பாலி உம்ரேக்கர் விருதை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) வழங்கியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருதுகள் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்த விருதை மூன்றாவது முறையாக பெறும் கோலி, இவ்விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் இந்த விருதை கடந்த 2011-12, 2014-15ல் வென்றார்.

இதே தமிழக வீரர் அஷ்வின், திலிப் சர்தேசாய் விருதை வென்றார். இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.

மேலும் படிக்க