• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலவச எரிவாயு இணைப்பு பெற இனி ஆதார் எண் அவசியம்

March 8, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஜ்வாலா” திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டதின் கீழ் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புடன் கூடிய இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இலவச காஸ் இணைப்பு பெற இனி ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஐந்து கோடி ஏழை பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். இந்த ஆண்டு மே 31ம் தேதிக்குள் இலவச காஸ் பெறுவோர் அனைவரும் தங்களின் ஆதார் எண் சான்றை அளிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க