• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்று மொழிகள் தயாராகும் “பாகுபலி” பிரபாசின் அடுத்த படம்..!

March 8, 2017 tamilsamayam.com

நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படமானது தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ்,பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.அவரது அடுத்த படமான பாகுபலி இரண்டாம் பாகத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படம் மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும்,மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை சுஜீத் என்பவர் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது விவேக் ஓபராய் அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க