• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.5000 – எஸ்.பி.ஐ

March 4, 2017 தண்டோரா குழு

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்(எஸ்.பி.ஐ.) அறிவித்துள்ளது.

இது குறித்து எஸ்.பி.ஐ. சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“பெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 -மும், நகர்ப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.3000-மும், புறநகர் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2000-மும், கிராமப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1000- மும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படம். இந்த முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். ஏ.டி.எம். இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்”.

இவ்வாறு எஸ்.பி.ஐ கூறியுள்ளது.

மேலும் படிக்க