• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நாச்சியார்’: சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதையா?

March 3, 2017 tamilsamayam.com

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வரும் ‘நாச்சியார்’ திரைப்படம் சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை இல்லை என படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.

சென்னையில், கடந்த 1980-களில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை தான் ‘நாச்சியார்’ என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறிய படக்குழு, ‘நாச்சியார்’ கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜோதிகாவின் தைரியமான வாழ்க்கை பயணம் பற்றிய கதை. இதில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி. இப்படம் உண்மை சம்பவம் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் ஜோதிகா தைரியமான காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சிவகுமார், இயக்குனர் ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துக்க கொண்டனர்.

மேலும் படிக்க