• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

”அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொழுத்துவேன்” – கன்னட நடிகர் திமிர் பேச்சு..!

March 3, 2017 tamilsamayam.com

”என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட்டால் தியேட்டர்களை கொழுத்துவேன்” என பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்,கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட உள்ளது.கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என்ற பெயரில் இந்த படமானது டப் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வெளியீட்டிற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.வேற்று மொழி படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டால்,கன்னட திரைப்படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கன்னட திரையுலகினர் கூறுகின்றனர்.இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கன்னட நடிகரான ஜக்கேஷ் என்பவர்,என்னை அறிந்தால் திரைப்படத்தை டப் செய்து வெளியிட உள்ள கர்நாடக தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் எனவும் அதற்காக சிறைக்கு செல்ல தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் மார்ச் 11-ஆம் தேதி பேரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க