• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலா – ஜி.வி. – ஜோதிகா கூட்டணியில் உருவாகும் ‘நாச்சியார்’

February 28, 2017 தண்டோரா குழு

இயக்குநர் பாலா – ஜோதிகா கூட்டணியில் உருவாகும் ’நாச்சியார்’ படத்தின் முதல் பார்வை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த நடிகை ஜோதிகா மலையாளப் படத்தின் ரீமேக்கான ‘36 வயதினிலே’ மூலம் வெற்றிகரமாக தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

இதையடுத்து பிரம்மா இயக்கத்தில் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்தார். அப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

அதையடுத்து, இயக்குநர் பாலா, நடிகை ஜோதிகா – ஜி.வி. பிரகாஷ் ஆகியோரை வைத்துப் புதிய படம் இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வையை நடிகரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா தனது ‘டிவிட்டரில்’ வெளியிட்டுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். அது மட்டுமின்றி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் ஜோதிகாவின் காட்சிகளைப் படமாக்க பாலா திட்டமிட்டுள்ளார். சில நாட்கள் கழித்து படக் குழுவினரோடு ஜி.வி. பிரகாஷ் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க