• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பி அடிக்க இந்தியா ரெடியா இருக்கு அலார்ட்டா இருங்க : ஸ்மித்!

February 27, 2017 tamilsamayam.com

பெங்களுருவில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கடினமாக திருப்பிக்கொடுக்க தயாராக உள்ளதாக,’ ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி,படுமோசமான தோல்வியை சந்தித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களுருவில் நடக்கிறது.

இதில் இந்திய அணி மீண்டு வரும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,’ புனே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீதம் சரியாக செயல்பட்டது என சொல்லவில்லை. ஆனால் எல்லாத்தையும் சரியாக செய்தோம் என்பது மட்டும் உறுதி. இனி போகும் பாதை நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும் என தெரியும். நம்பர்-1 அணியான இந்திய அணி, அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது. குறிப்பாக சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் தோல்வியை சந்திக்கும் போது அதன் விளைவு எவ்வளவு கடினமான காரியம் என தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்,’ என்றார்.

மேலும் படிக்க