• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேபாளத்தில் இரண்டு மிதமான நிலநடுக்கம்

February 27, 2017 தண்டோரா குழு

நேபாளத்தில் இரண்டு மிதமான நிலநடுக்கம் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) காலையில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4.6 மற்றும் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

நேபாளத்தில் உள்ள ரமேச்சப் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இது ரிக்டர் அளவு கோளில் 4.6 மற்றும் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த ரிக்டர் அளவை தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளது.

முதல் நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை 9.22 மணியளவிலும் இரண்டாவது நிலநடுக்கம் காலை 1௦.௦6 மணியளவிலும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கம் காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதிலும் உணரப்பட்டது.

“முதல் நிலநடுக்கம் காத்மாண்டுவில் உள்ள சாலு என்னும் இடத்தில் (27.36° வடக்கு 86.12° கிழக்கு) மையம் கொண்டிருந்தது. அதே போல் இரண்டாவது நிலநடுக்கம் (27.38° வடக்கு 86.13° கிழக்கு) ஸ்வன்ரா என்னும் இடத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்ப்படவில்லை” என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

“மேலும் 2௦15ம் ஆண்டு நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, 478 நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது” என்று தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க