• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடியை முதல்வர் சந்தித்தது அரசு முறை சந்திப்‌புதான் – தமிழிசை சவுந்தரராஜன்

February 25, 2017 தண்டோரா குழு

“தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது அரசுமுறை சந்திப்‌புதான்” என்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி சிவன் சிலை திறப்பு மற்றும் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் கடந்த 24-ம் தேதி பங்கேற்க பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் பிரதமர் மோடி தில்லி கிளம்பும் முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பிரதமருடன் அவர் சந்தித்துப் பேசியது இதுவே முதன்முறையாகும். “நீட்” தேர்வுக்கு விலக்கு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

எனினும், நிகழ்ச்சிக்காகப் பங்கேற்க வந்த பிரதமரிடம் முதலமைச்சர் தனியாகச் சந்தித்துப் பேசியது மற்ற கட்சியினரிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பல தரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளியானது.

இது குறித்து நிகிழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிட‌ம் சனிக்கிழமை பேசுகையில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியைச் சந்தித்தது அரசு முறை சந்திப்புதான். அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை” என்றார்.

மேலும் படிக்க