• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மிச்சல் ஜான்சன், கமின்ஸ், டிரன்ட் போல்ட் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம்!

February 20, 2017 tamilsamayam.com

ஐபிஎல் 2017 சீசனுக்கான ஏலத்தில், இந்திய வீரர்களை விடவும், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கே அதிக தேவை நிலவுகிறது.

ஏலம் கேட்பு தொடங்கியது முதலாகவே, வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும் அதேசமயம், இந்திய வீரர்களில் பலர் தொடர்ந்து கழற்றிவிடப்பட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில், நியூசிலாந்து ஆல் ரவுண்டர் டிரன்ட் போல்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக, ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர், இன்றைய ஏலத்தில் 3வது அதிகபட்சமாக விலை போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கு விலை போயுள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மின்னல் வேக பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் ரூ.4.50 கோடிக்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு நட்சத்திர பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சல் ஜான்சன், ரூ.2 கோடிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க