• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக் கூட்டத்துக்கு வரவேண்டும் – அரசு கொறடா

February 17, 2017 தண்டோரா குழு

அதிமுக எம்.எல்.ஏ- கள் அனைவரும் சட்ட பேரவைக்கு சனிக்கிழமை தவறாமல் வர வேண்டும் என்று ஆளும் கட்சி (அரசு) கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் பிறப்பித்த உத்தரவில்,

“எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, அதிமுகவைச் சேர்ந்த 134 எம்.எல்.ஏ.க்களும் பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க