• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்த நாளில் சிவகார்த்திகேயனுக்கு ”வேலைக்காரன்” பரிசளிப்பு!!

February 17, 2017 tamilsamayam.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி நடிப்பில் தான் இயக்கி வரும் படத்திற்கு ”வேலைக்காரன் என்று இயக்குநர் மோகன் ராஜா பெயர் வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும், பிரபல இயக்குநருமான மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ பலத்த வெற்றியை பெற்றது. இந்த வெற்றிப் படத்திற்குப் பின்னர் தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா,பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு தனி ஒருவன் 2ஆம் பாகம் என்று பெயர் வைப்பார் என்று கூறப்பட்டது. மேலும் இந்தப் படத்திற்கான பெயரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று இந்தப் படத்திற்கு வேலைக்காரன் என்று பெயரிட்டுள்ளார். இதை மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரெமோ படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டியோஸ் ராஜா தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘வேலைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் எனறும் அறிவித்துள்ளார். ரெமொவுக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் தற்போது இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க