• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி இயக்குநரின் படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள்..?

February 11, 2017 findmytemple.com

‘பாகுபலி’ பட இயக்குநர் ராஜ மெளலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பாகுபலி படத்தின் மூலமாக இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ராஜமெளலி,தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்து விட்டார்.பாகுபலி இரண்டாம் பாகம்,ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு,பிரம்மாண்டமான முறையில் எடுக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தில் கதாநாயர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,மோகன் லால் மற்றும் அமீர்கான் ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வராவிட்டாலும்,ராஜமெளலியின் தந்தையான விஜேந்திர பிரசாத்,மறைமுகமாக மகாபாரதம் படம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார்.தற்போது மகாபாரதம் படத்திற்கான கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ராஜ மெளலி,பாகுபலி வீடியோ கேம் உருவாக்கத்திற்காகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க