• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் ஓட்டை திரும்ப தாங்கடா – நடிகை ஆவேசம்

February 10, 2017 தண்டோரா குழு

“என் ஓட்டை திரும்பிக் கொடுங்க” என நடிகை ஸ்ரீபிரியா தனது ‘டிவிட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

சசிகலா தன்னை மிரட்டி, பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் பகிரங்கமாக மீது குற்றம் சாற்றினார். இதனால், தமிழக அரசியலில் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே அதிகார மோதல் நடந்து வருகிறது.

இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நாங்கள் ஜெயலலிதா முகத்திற்காக வாக்களித்தால், இன்று யார் யாரோ முதல்வர் பதவிக்குச் சண்டை போட்டு வருகின்றனர்” என்று தங்களது ஆதங்கத்தை தமிழக மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா, தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில்

தமிழக அரசியல் நிலைமையைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் ஸ்ரீபிரியா, “என் ஓட்டைத் திரும்பப் பெற முடியுமா? திரும்பத் தாங்கடா..!” என ஒரே வரியில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க