• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் – ராஜ்நாத் சிங்

February 10, 2017 தண்டோரா குழு

தமிழக விவகாரத்தில் ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தரப்பும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை சந்தித்தனர்.

ஆளுநருடனான தனது சந்திப்புக்குப் பின் ஓ.பி.எஸ். நிருபர்களிடம் பேசுகையில், ” நல்லதே நடக்கும் , வாய்மையே வெல்லும் ” என்றார்.சசிகலா தரப்பினர் சட்டப் பேரவையின் 130 உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவிற்கு உள்ளதால் ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்புகள் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி முடிவு எடுப்பார். தமிழகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநரே என்பதால், அவரின் முடிவுக்கே இந்த விவகாரம் விடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் படிக்க