• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் – ராஜ்நாத் சிங்

February 10, 2017 தண்டோரா குழு

தமிழக விவகாரத்தில் ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தரப்பும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை சந்தித்தனர்.

ஆளுநருடனான தனது சந்திப்புக்குப் பின் ஓ.பி.எஸ். நிருபர்களிடம் பேசுகையில், ” நல்லதே நடக்கும் , வாய்மையே வெல்லும் ” என்றார்.சசிகலா தரப்பினர் சட்டப் பேரவையின் 130 உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவிற்கு உள்ளதால் ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்புகள் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி முடிவு எடுப்பார். தமிழகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநரே என்பதால், அவரின் முடிவுக்கே இந்த விவகாரம் விடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் படிக்க