• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களாட்சியின் மாண்பை சிதைக்கும் செயல் – மு.க ஸ்டாலின்

February 9, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகள் போல் சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை;d சிதைக்கின்ற செயலாக இருக்கிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சிld தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மையுடனும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநரின் வருகையும் அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், “கட்டாயப்படுத்தி என்னிடம் ராஜினாமா கடிதம் வாங்கினார்கள்” என்று தனது கட்சித் தலைமையின் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க.வின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அவர்களைச் சொகுசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் இப்படி பிணைக் கைதிகள் போல் சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்கள் மாநிலத்தில் நிலையான, சுதந்திரமான, சட்டப்பூர்வமான வழியில் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். எனவே, ஆளுநர் சட்ட ரீதியிலான முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டப் பேரவை வாக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க