• Download mobile app
19 Sep 2026, SaturdayEdition - 3874
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் மெய்க்காவலர் சுட்டு ஆப்கன் தூதரக அதிகாரி சாவு

February 6, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் மெய்க்காவலர் சுட்டதில், தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

கராச்சி நகரின் கிளிப்டன் என்னும் இடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி திங்கள்கிழமை (பிப்ரவரி 6) கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் மூன்றாம் செயலராக இருந்த முகமது ஸகி அப்து.

அப்போது தூதரகத்தின் பாதுகாவலர் ரஹதுல்லா தூதரக அதிகாரியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். அதில் குண்டு பாய்ந்த முகமது ஸகி அங்கேயே சரிந்து விழுந்து இறந்தார். ரஹதுல்லா அவரைச் சுட்டுக் கொல்ல இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். அவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

பாதுகாப்பு படை அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ”தனிபட்ட பகையால் இச்சம்பவம் நடந்திருக்கும் என்று கருதுகிறோம்” என்று கூறியுள்ளது.

இதையடுத்து தூதரகம் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் காவல்துறையினரும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரும் அவ்விடத்தை சுற்றி வளைத்து பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் படிக்க