• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா பெயரை நீக்க கர்நாடக அரசு மனுதாக்கல் செய்யும் – ஆச்சார்யா

February 6, 2017 தண்டோரா குழு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறியதாவது:

“ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர்-5ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவரது பெயரை நீக்கும்படி உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

இதை உச்ச நீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே, இதற்கான சிறப்பு மனு ஒன்றை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நீடிக்கும் . அவர்கள் மூன்று பேரும் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.”

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

மேலும் படிக்க