• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மைதானத்துக்கள் விளையாடிய தேனீக்கள்!

February 6, 2017 tamilsamayam.com

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில், மைதானத்துக்குள் தேனீக்கூட்டம் புகுந்தது.

தென் ஆப்ரிக்கா சென்ற இலங்கை அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், தென் ஆப்ரிக்க அணி, 2-0 என முன்னிலை வகித்தது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடந்தது. இப்போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி, வென்றது . ஆனால் இப்போட்டியின் போது இலங்கை அணி, முதலில் ‘பேட்டிங்’ செய்த போது, மைதானத்துகுள் திடீரென தேனீக்கள் கூட்டம் படை எடுத்தது.

இதனால் போட்டி இரண்டு முறை தாமதமானது. முதலில் 25வது ஓவரில் மைதானத்துக்குள் தேனீக்கூட்டம் புகுந்தது. அப்போது சிலிப் பீல்டர்கள் மைதானத்தில் அப்படியே படுத்தனர். பின் சிறிது நேரத்துக்கு பின், போட்டி துவங்கியது. பின் 27வது ஓவரில் மீண்டும் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் நுழைந்தது.

இதனால் போட்டியை அம்பயர்கள் சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக நிறுத்திவைத்தனர். பின் பணியாளர்கள் வந்து தேனீக்களை மருந்து அடித்து விரட்டினர். இதனால் போட்டி ஒரு மணிநேர தாமதத்துக்கு பின் மீண்டும் துவங்கியது.

மேலும் படிக்க