July 15, 2026
தண்டோரா குழு
கோவையில் ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “ஆடி அதிரடி யூஸ்டு கார் மேளா” திருவிழாவை கார்ஸ் 327 நிறுவனம் நடத்துகிறது.
இந்த ஐந்து நாள் சிறப்பு கண்காட்சி ஜூலை 16 முதல் 20 வரை, கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்ஸ் 327 நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணு வேணுகோபால்,
ஆடி மாத சிறப்பு தள்ளுபடிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட தரமான யூஸ்டு கார்கள் ஒரே இடத்தில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான பல்வேறு ரக கார்கள் விற்பனைக்கு உள்ளன.
மேலும், வாகனம் வாங்க விரும்புவோருக்கு உடனடி வங்கி மற்றும் தனியார் நிதி உதவி, இன்சூரன்ஸ், சர்வீஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் முன் தங்களது மெக்கானிக்கை அழைத்து வந்து முழுமையாக பரிசோதனை செய்து வாங்கலாம் என்றும், இது வாடிக்கையாளர்களுடனான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல்,வாடிக்கையாளர்களின் பழைய கார்கள் எந்த நிலையிலிருந்தாலும், அவற்றை மதிப்பீடு செய்து நல்ல விலையில் எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார் வாங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.