June 13, 2026
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் பட்டயப் படிப்பு வழங்கும் விழா இன்று பி.எஸ்.ஜி டெக் சென்டனரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. கிரிராஜ் அனைவரையும் வரவேற்றார். ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஹோம் சொல்யூஷன்ஸ் வணிகப் பிரிவுத் தலைவர் பிரேமிகா சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆடைத் தொழில்நுட்பம், வாகனப் பொறியியல்,கணினிப் பொறியியல், கணினி வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல், வடிவமைப்பு மற்றும் வரைபடம் வரைதல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல், வார்ப்புத் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், இயந்திரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், மெகாட்ரானிக்ஸ் மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 546 மாணவர்கள் தங்கள் பட்டயச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
இவர்களில் முதல் இடத்தைப் பிடித்த 14 மாணவர்கள், சிறந்து விளங்கியதற்கான விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி,புதிதாகப்பட்டயப் படிப்பு முடித்த 546 மாணவர்கள் பட்டயப் படிப்பு உறுதிமொழி எடுத்தனர்.மாணவர்கள் தங்களது பட்டயச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்களில் 14 மாணவர்கள் முதல் தரவரிசை பெற்று, அவர்களுக்குத் திறமைக்கான விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.