May 13, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியரிடம் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சங்க தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிறுவனர் தலைவர் பிரசன்ன மணிகண்டன்,
“முதல்வர் ஜோசப் விஜய் தனது அரசியல் பிரிவு அலுவலராக ரிக்கி ராதன் வெற்றிவேல் பண்டிட் அவர்களை நியமித்திருப்பது அவரது திறமை மற்றும் நீண்டகால அரசியல் பயணத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட பொறுப்பாகும்.“ஒருவர் ஜோதிடர் என்பதற்காக அவரது நியமனத்தை அறிவியலுக்கு எதிரானது என சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஜோதிடம் என்பது வான் சாஸ்திரம், கணிதம் மற்றும் நாள்காட்டி முறைகளை அடிப்படையாகக் கொண்ட கலை. தமிழகத்தில் பல லட்சம் ஜோதிடர்கள் மக்களின் அன்றாட வாழ்வில் நம்பிக்கையூட்டும் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய ஜோதிடக் கலையை இழிவுபடுத்துவது ஒட்டுமொத்த ஜோதிட சமூகத்தையும் அவமதிப்பதாகும் என்றும், அரசியல் விமர்சனங்களின் பெயரில் மத நம்பிக்கைகள் மற்றும் தொழில்களை புண்படுத்தும் வகையில் பேசுவது அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது.
மேலும்,வன்னியரசு தனது பேச்சுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்க நிர்வாகக் குழு கூடி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.