• Download mobile app
05 Apr 2026, SundayEdition - 3707
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தசை அழிவைத் தடுக்கும் “MYO SHIELD” திட்டத்தை கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் தொடங்கியது

April 5, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப், தலைவர் ரோட்டேரியன் டாக்டர் சித்ரா மனோஹர் தலைமையில், “MYO SHIELD” எனும் உலகளாவிய மானியத் திட்டத்தை சிறப்பாக தொடங்கியது. தசை அழிவு நோயைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த முன்னோடியான திட்டத்தின் துவக்க விழா நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள MDCRC மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தைத் துவக்கி வைத்தார். தனது உரையில், சமூகத்தில் முக்கியமான சுகாதார சவால்களை எதிர்கொள்ள கிளப் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், எதிர்கால தலைமுறைகளை பாதுகாக்கும் தடுப்பு மருத்துவத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கிளப் தலைவர் ரோட்டேரியன் டாக்டர் சித்ரா மனோஹர், “MYO SHIELD என்பது ஒரு சாதாரண திட்டம் அல்ல; இது கருணையும் பொறுப்பும் இணைந்த ஒரு பணி. நிலையான மற்றும் அர்த்தமுள்ள சேவையின் மூலம் நீடித்த மாற்றத்தை உருவாக்க எங்கள் கிளப் உறுதியாக செயல்படும்,” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டேரியன் ஏ.வி. பதி (DLF), ரோட்டேரியன் எஸ். ராஜசேகர் (DRFC), ரோட்டேரியன் செந்தில் ராஜகோபால் (மாவட்ட மானியத் தலைவர்) உள்ளிட்ட பல முக்கிய ரோட்டரி தலைவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் பாராட்டினர்.

MDCRC அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் பி.ஆர். லக்ஷ்மி, தசை அழிவு போன்ற நரம்பு-தசை குறைபாடுகளைத் தடுப்பதில் ஆரம்ப நிலை பரிசோதனை மற்றும் மரபணு ஆலோசனையின் அவசியத்தை விளக்கினார். MYO SHIELD திட்டம் மூலம் நோய் பரப்புநர்களை அடையாளம் காணுதல் மற்றும் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மூலம் எதிர்கால தலைமுறைகளில் இந்த நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் ரோட்டேரியன் ஆர்.எஸ். மருதி (DGE), ரோட்டேரியன் எஸ். சுப்ரமணியன் (DGN), ரோட்டேரியன் ஜே. சஞ்சீவி குமார் (DGND), ரோட்டேரியன் என். சுந்தரவடிவேலு (IPDG), ரோட்டேரியன் கே.எஸ். பிள்ளை (PDG), ரோட்டேரியன் வி. வரதராஜன் (DD), ரோட்டேரியன் ஏ. ஜெயகாந்தன் (AG), ரோட்டேரியன் ரமேஷ் சந்திரகுமார் (GGR) உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

MYO SHIELD திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டு, மரபணு சார்ந்த கடுமையான நரம்பு-தசை நோய்கள் பரவுவதைத் தடுப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சி செயலாளர் ரோட்டேரியன் டாக்டர் டி. பினா நன்றி உரையுடன் நிறைவுற்றது.

மேலும் படிக்க