• Download mobile app
20 Feb 2026, FridayEdition - 3663
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா – 750 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

February 20, 2026 தண்டோரா குழு

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் கல்லூரி செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இம்பாக்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முரளி மேனன்,கெளரவ விருந்தினராக கோவை மறைமாவட்ட தலைவர் பிஷப் எஸ்.பிரின்ஸ் கால்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இளம் கலை முதுகலை பி.எச்டி. மாணவர் மாணவிகள் மொத்தம் 750 பேருக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அதனை சிறப்பு அழைப்பாளர்கள் முரளி மேனன்,பிஷப் பிரின்ஸ் கால்வின் ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் கல்லூரி துணை முதல்வர் பால்சுதன் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க