• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.பி.,இ.அகமது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

February 1, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலம் மலப்புரம் மக்களவை உறுப்பினர் இ.அகமது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை டிவிட்டரில்,” கடின உழைப்பின் மூலம் தேசத்திற்கு சேவையாற்றிய மூத்த அரசியல் தலைவர் அகமது. மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்த முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது.”என்றார் .

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரையின் போது கேரள மாநிலம் மலப்புரம் பகுதி மக்களவை உறுப்பினர் இ. அகமது மயங்கி விழுந்தார்.

இதனையடுத்துஅவர் உடடினயாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது .இருப்பினும் மாரடைப்புகாரணமாக சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க