• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா – ரஷ் ரிப்பப்லிக் சார்பில் சாண்டா’ஸ் சோசியல் கொண்டாட்டம் துவக்கம்!

December 13, 2025 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் இன்றும் (13.12.25) மற்றும் நாளை 14.12.25 நடக்கிறது.

இதன் துவக்க விழாவில் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் குடும்பமாகவும், நண்பர்களாகவும் வந்து ஷாப்பிங் செய்ய ஏராளமான பொருட்கள் உள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதும் கிறிஸ்துமஸ் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பும் கிறிஸ்துமஸ் தாத்தா, கேக் வகைகள், வண்ண விளக்கு அலங்காரங்கள் என பல உள்ளன.

துவக்க நாளான இன்று பிரபல ராக்ஸ் பள்ளிக்கூடம் – சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை பாடி அசத்தினர். அவர்களை தொடர்ந்து பல இசை குழுவினரும் பாடல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.மேலும் இன்று சிறப்பாக நடைபெற்ற ‘நாய்களுக்கான போட்டிகள்’ அங்கு கூடிய மக்களை வெகுவாக கவர்ந்தது. 50க்கும் மேற்பட்ட நாய்கள் தங்கள் உரிமையாளர்கள் கட்டளையை ஏற்று கட்டுப்பாடுடன் நடந்து,அனைவரின் கவனத்தை ஈர்த்தன.இறுதியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவையில் நடைபெறும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான இந்த நிகழ்ச்சி பற்றி ரஷ் ரிப்பப்லிக் நிறுவனத்தின் இணை-நிறுவனர் லக்ஷ்மிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

இது “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு. இதை கோவை ராக்ஸ் பள்ளிக்கூடம் கோவை மக்களுக்காக வழங்குகிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சூர், கொச்சின், பெங்களூரு என தென்னிந்தியாவின் பல இடங்களில் இருந்து 100 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இவை நவீன உடை/ஜவுளி, அலங்கார பொருட்கள்/தயாரிப்புகள், உணவு மற்றும் சிற்றுண்டி நிறுவனங்கள், விளையாட்டு என பல பிரிவுகளில் இயங்கும் பிராண்டுகள்.

இன்றும் நாளையும் (14.12.25) இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். 5 வயது முதல் பெரியவர்கள் அனைவர்க்கும் நுழைவு கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மக்களிடம் “சாண்டா’ஸ் சோசியல்” கிறிஸ்துமஸ் நிகழ்விற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த நிகழ்வில் பல புது நிறுவனங்கள் தங்களின் துவக்கத்தை அறிவிப்பது வழக்கம். அதுபோல பல நிறுவனங்கள் இந்த நிகழ்வில் இந்த ஆண்டும் தங்கள் துவக்கத்தை மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்ற ஆண்டு வாடிக்கையாளர்கள் மொத்தம் 8000 பேர் 2 நாட்கள் சேர்த்து வருகை தந்தனர். இந்த ஆண்டு அதேபோல 8000 முதல் 10,000 வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். சென்ற வருடம் இந்த நிகழ்வில் நடைபெற்ற மொத்த வியாபாரம் ரூ.2 கோடி ( தோராயமாக) அதேபோல இந்த ஆண்டும் இருக்கும் என நம்புகின்றோம் என்றார்.

மேலும் படிக்க