• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் – முதல்வர் அறிவிப்பு

January 31, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட மாணவர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வன்முறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுப் பேசினார்.

சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது:-

“ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். போலீஸ் தடியடி, வன்முறை தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தும். காவல் துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்பது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்தும். மூன்று மாதத்துக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்படும்.

வாகனங்கள் மற்றும் வீடுகளுக்குத் தீ வைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் தாற்காலிக மீன்சந்தை அமைக்கப்படும். நடுக்குப்பம், மாட்டான் குப்பம் மீனவர்களுக்கு ஆய்வுக்குப் பின், உரிய நிவாரண நிதி வழங்கப்படும்.ஜல்லிக்கட்டு வன்முறையின்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்”.

இவ்வாறு முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும் படிக்க