• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

36 இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பு

January 27, 2017 தண்டோரா குழு

சர்வதேச எல்லையை தாண்டியதாக 36 இந்திய மீனவர்களையும் அவர்களுடைய 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.

இது குறித்து போர்பந்தர் நேஷனல் பிஷ் வோர்கர்ஸ் போரம்(National Fishworkers Forum) செயலாளர், மனிஷ் லோதாரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை(ஜனவரி 27) கூறியதாவது:

“சர்வதேச எல்லையை தாண்டியதாக 36 இந்திய மீனவர்களையும் அவர்களுடைய 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.

மற்ற மீனவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, ஜக்ஹு கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த 36 மீனவர்களையும் அவர்களுடைய 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. அவர்களை கராச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் பல இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அஞ்சுகிறேன்.

கராச்சி துறைமுகத்தை அவர்கள் நாளை அடைந்த பிறகு தான் முழு விவரமும் எங்களுக்கு தெரியவரும். இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர் என்று கூறி இந்திய மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது.

கடந்த மாதம் இந்திய மீனவர்கள் 65 பேரையும், அவர்கள் சென்ற 13 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை சிறைப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க