• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படப்பிடிப்பில் கோக், பெப்சிக்கு அனுமதியில்லை – ஏ.ஆர். முருகதாஸ்

January 26, 2017 தண்டோரா குழு

தனது படங்களுக்கான படப்பிடிப்புகளில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்கள் வழங்கப்படமாட்டாது. அதற்கு அனுமதியில்லை என்று திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அதில் ஒரு கோரிக்கையாக வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி கோக் போன்ற குளிர்பானங்களைத் தடை செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

அதையெடுத்து தற்போது தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்கக்கூடாது என ஒரு கருத்து வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், கத்தி படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கத்தி படத்துக்குக் கதை எழுதத் தொடங்கியதிலிருந்தே பெப்சி, கோக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. இனி படப்பிடிப்பிலும் அவற்றை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

முருகதாசின் முடிவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கத்தி படத்தின் மையக் கதையே கார்ப்பரேட்டுக்கு எதிரானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க