• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற “இளைஞர் மாநாடு 2025”

January 11, 2025 தண்டோரா குழு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டமும் தஞ்சாவூர், ஸ்ரீ இராமகிருஷ்ண மடமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் மாநாடு 2025ஐ நடத்தியது.

இந்நிகழ்வில்,சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் V.காமகோடி சிறப்புவிருந்தனராகப் பங்கேற்று ” இந்தியா விஸ்வகுரு ஆவதற்கு நம் இளைஞர்களின் பங்கு ” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

அவர்தம் உரையில்,

“எதிர்வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகத் திகழ்வதற்கு நம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஐக்கிய நாடுகள் அவை பதினேழு குறிக்கோள்களைப் பட்டியலிட்டுள்ளது என்றும் நம் நாடு வல்லரசு ஆவதற்கு அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவற்றுள் நான்காவது குறிக்கோள் கல்வி குறித்து அமைந்துள்ளது என்றும் குறைந்த செலவில் தரமான கல்வியை அனைவருக்கும் தரவேண்டும் என்றும் கூறினார்.உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக நமது நாடு உள்ளது.

ஆனால் தேசிய அளவில் இருபத்தேழு விழுக்காடு மாணவ,மாணவியரே உயர்கல்வியில் சேர்கின்றனர். இதை உயர்த்த வேண்டிய பொறுப்பு தம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.கல்வி கற்கப் பொருளாதார வசதி தடையாகிவிடக்கூடாது. ஏழ்மையால் ஒருவரால் கல்வியை அடைய இயலவில்லை என்றால் அந்த ஏழை மாணவரிடம் நாம் கல்வியைக் கொண்டு சேர்ப்போம் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

விவேகானந்தர் கூறியதை நாம் செயலாக்க வேண்டும் என்றும் வசுதைவ குடும்பகம் என்னும் உலகத்தை ஒன்றாகப் பார்க்கும் சிந்தனையை நம் பாரதம் உலகுக்கு வழங்கியது என்றும் குறிப்பிட்டார். நிலைத்தன்மை,தன்னிறைவு,தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவு ஆகியவை நம் நாட்டை வல்லரசாக்கும் வழிகள் ” என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வே.சங்கீதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார். தஞ்சாவூர் இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி விமூர்த்தானந்த மகராஜ், கேரளா கோயிலாண்டி இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி நரசிம்மானந்த மகராஜ் மற்றும் கத்தார் தோஹா வங்கியின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர். சீதாராமன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மரணவர் சி.எழில் நன்றியுறையாற்றினார்.விழாவின் நிறைவில் சுவாமி விவேகானந்தரின் வாசகங்களைக் கூறி மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர்.

மேலும் படிக்க