• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமாலியா தீவிரவாத தாக்குதலில் 7 பேர் பலி

January 25, 2017 தண்டோரா குழு

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல விடுதி மீது புதன்கிழமை(ஜனவரி 25) அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து சோமாலியா நாட்டின் காவல்துறை அதிகாரி முஹமது ஹுசைன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

“மொகடிஷுவில் உள்ள பிரபல விடுதியில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தின்போது அந்த விடுதியில் வழக்கறிஞர்கள் சிலர் தங்கி இருந்தனர்.

அவர்கள் நிலைமை குறித்து எந்த தகவலும் இல்லை. இச்சம்பவத்திற்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் தான் காரணம். அவர்களுடைய பிரதான கோட்டைகள் அகற்றப்பட்ட போதிலும், அவர்கள் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் கொடிய தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க